பொட்டணம் அரசு உயர்நிலைப்பள்ளி எதிரில் மின் கம்பம் உள்ளது. இந்த கம்பத்தில் திறந்த நிலையிலும், கையால் தொடும் வகையிலும் மின்பெட்டி காணப்படுகிறது. தற்போது பள்ளி திறக்கப்பட்டுள்ளதால் மாணவர்கள் அந்த வழியாக செல்லும்போது அதனை தொடுவதற்கு வாய்ப்பாக உள்ளது. எனவே மாணவ, மாணவிகளின் பாதுகாப்பு கருதி ஆபத்தான நிலையில் உள்ள அந்த மின்சார பெட்டியை மூடி வைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்
-குலசேகரன், பொட்டணம்.