தஞ்சை கீழவாசல் பகுதியில் குறிச்சி சுப்பிரமணியம்தெரு,மராட்டியர் தெரு உள்ளது. இந்த தெருக்களில் உள்ள மின்விளக்குகள் கடந்த சில நாட்களாக சரிவர எரிவதில்லை. இதனால் இரவு நேரங்களில் தெரு முழுவதும் இருள் நிறைந்து காணப்படுகிறது. வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகின்றனர். பொதுமக்கள் அச்சத்துடன் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள தெருவிளக்குகள் மீண்டும் ஒளிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.