பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகம் அருகே மகளிர் சுய உதவிக்குழு வணிக வளாகம் உள்ளது. இந்த கட்டிடத்தில் பலர் கடை வைத்து நடத்தி வருகின்றனர். இந்த கட்டிடத்திற்கு அருகே உள்ள தெருவிளக்குகள் கடந்த சில நாட்களாக எரியாமல் இருளில் மூழ்கி உள்ளது. இதனால் இரவு நேரங்களில் கடைகளுக்கு வரும் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தெருவிளக்குகளை சீரமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.