பெருமாநல்லூர் மின்வாரிய அலுவலகத்திற்கு உட்பட்ட சொக்கனூர் கிராமம் மகாலட்சுமி நகரில் இரண்டு மின்கம்பங்கள் சிதிலமடைந்து உள்ளது. இந்த மின்கம்பங்கள் எப்போது வேண்டுமானாலும் உடைந்து விழும் அபாயம் காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக பொதுமக்கள் நடந்து செல்ல அச்சப்படுகிறார்கள். எனவே பேராபத்துகள் ஏற்படுவதற்குள் பொதுமக்களை அச்சுறுத்தும் மின்கம்பங்களை மாற்றிவிட்டு புதிய மின்கம்பங்கள் அமைக்க மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்
ரஞ்சித்குமார், பெருமாநல்லூர்.