ராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டினம் கிராமத்தில் பகல் மற்றும் இரவு நேரங்களில் தொடர்ந்து மின்வெட்டு ஏற்படுகிறது. தற்போது கோடை காலம் என்பதால் வாட்டி வரும் வெயிலின் தாக்கத்தால் இரவில் வீட்டில் அதிக அளவில் புழுக்கம் ஏற்படுவதோடு மின்வெட்டும் ஏற்படுவதால் மக்கள் தூக்கமின்றி மிகவும் அவதியடைகின்றனர். எனவே மின்வாரிய அதிகாரிகள் மேற்கண்ட பகுதிகளில் மின்இணைப்பை ஆய்வு செய்து தொடர் மின்வெட்டு ஏற்படுவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.