பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட அய்யன்கொல்லி அருகே பாதிரிமூலாவில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதி வனப்பகுதியை ஒட்டி உள்ளதால் வனவிலங்குகள் நடமாட்டம் காணப்படுகிறது. ஆனால் அங்கு தெருவிளக்கு வசதி இல்லை. இதனால் இரவில் அவசர தேவைக்கு கூட வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் மக்கள் அவதிப்படுகிறார்கள். எனவே அங்கு தெருவிளக்கு வசதி ஏற்படுத்தி கொடுக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.