திருவள்ளுர் மாவட்டம், சோழவரம்-கம்மவார் பாளையம் சாலையை ஏராளமான பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், இந்த சாலையில் உள்ள மின்விளக்குகள் சரியாக எரியவில்லை. இதனால் அந்த வழியாக இரவு நேரங்களில் தினமும் வேலை முடிந்து வரும் பெண்கள் மற்றும் முதியவர்கள் அச்சத்துடன் செல்லும்நிலை உள்ளது. எனவே, மின்வாரிய அதிகாரிகள் மின்விளக்குகள் எரிய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.