உளுந்தூர்பேட்டை அம்மாபொன்நகரில் தெருமின்விளக்குகள் இல்லை. இதனால் இரவில் அப்பகுதி முழுவதும் இருள்சூழ்ந்து காணப்படுவதால் திருட்டு, வழிப்பறி போன்ற குற்றச்சம்பவங்கள் நடைபெறும் அபாயம் உள்ளது. இதன் காரணமாக இரவில் வீட்டைவிட்டு வெளியே வரவே அப்பகுதி மக்கள் அச்சப்படுகின்றனர். எனவே, அம்மாபொன்நகரில் தெருமின்விளக்குகள் பொருத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.