அம்பை அருகே சிவந்திபுரம் பஞ்சாயத்து சக்திநகர் கீழ்பகுதியில் அம்மாநகர் அருகில் உள்ள சாலையின் நடுவில் மின்கம்பம் உள்ளது. இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்வதற்கு இடையூறாக உள்ளது. மேலும் அடிக்கடி விபத்துகளும் நிகழ்கின்றன. எனவே போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள மின்கம்பத்தை சாலையோரம் மாற்றி அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.