சென்னை செனாய் நகர், அப்பாராவ் தோட்டம் 3-தெருவில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள மின்பெட்டி ஆபத்தான நிலையில் திறந்து காணப்படுகிறது. இதனால், மழைகாலங்களில் மின்விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும், சிறுவர்கள் விளையாடும் பகுதி என்பதால் ஆபத்தை உணர்ந்து மின்வாரிய துறை அதிகாரிகள் உடனடியாக மின்பெட்டியை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.