திருவள்ளூர் மாவட்டம், மணவாள நகர் பகுதியில் இருந்து திருவள்ளூர் ரெயில் நிலையம் செல்லும் சாலையை தினமும் ஏராளமானோர் பயன்படுத்தி வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள உயர் கோபுர மின்விளக்கு கடந்த 6 மாதங்களாக எரியவில்லை. இதனால், இரவு நேரங்களில் வேலை முடிந்து வரும் பெண்கள் மற்றும் கல்லூரி முடிந்து வரும் மாணவிகள் அச்சத்துடன் இந்த பகுதியை கடந்து செல்கின்றனர். மேலும், அடிக்கடி விபத்துக்களும் ஏற்படுகிறது. எனவே மின்விளக்கை சரிசெய்ய மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.