அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள உயர் மின் கோபுர விளக்குகள் கடந்த சில மாதங்களாக எரியாமல் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மேலும் இருளை பயன்படுத்தி சட்ட விரோத செயல்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.