சேதமடைந்த மின்கம்பம்

Update: 2025-04-20 10:42 GMT

பட்டுக்கோட்டை டவுன் பகுதியில் நாடியம்மன் கோவில் உள்ளது. கோவிலின் பின்புறம் சிவகொல்லை 3-வது தெருவில் சாலையோர வளைவில் மின்கம்பம் ஒன்று உள்ளது. இந்த மின்கம்பத்தின் அடிப்பகுதி மற்றும் மேற்பகுதி சேதமடைந்து இருக்கிறது. சிமெண்டு காரைகள் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிவதால் மின்கம்பத்தின் உறுதித்தன்மை கேள்விக்குறியாகி உள்ளது. எப்போது வேண்டுமானாலும் மின்கம்பம் கீழே விழுந்துவிடும் நிலை உள்ளது. எனவே, அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன்பு சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின்கம்பம் நட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்