திண்டுக்கல் அருகே கஸ்தூரிநாயக்கன்பட்டியில் உள்ள மின்கம்பங்களில் பொருத்தப்பட்டுள்ள தெருவிளக்குகளுக்கான மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுவிட்டது. இதனால் கடந்த சில நாட்களாக அந்த பகுதியில் இரவில் பொதுமக்கள் வெளியே செல்ல முடியாத அளவுக்கு இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் பெரிதும் பரிதவிக்கின்றனர். எனவே தெருவிளக்கை சீரமைக்க வேண்டும்.