அந்தியூர் அருகே மூங்கில்பட்டியில் உள்ள ஊர்ப்புற நூலகம் வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. சிறிய அறையாக உள்ளதால் வாசகர்கள் உட்கார்ந்து படிக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். மெயின் ரோட்டில் உள்ள சந்தைப்பகுதியில் 15 ஆண்டுகளுக்கு முன்பு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் கீழ் நூலகம் கட்டப்பட்டு பொழுதுபோக்கும் இடமாக பயன்படுத்தி வருகின்றனர். இங்கு நூலகத்தை இடமாற்ற அதிகாரிகள் முன்வருவார்களா?