பழனி நகரில் பஸ் நிலையத்தில் இருந்து காலேஜ்மேடு வரை செல்லும் சாலையில் சில நேரங்களில் மின்விளக்குகள் எரிவதில்லை. இதனால் அங்கு இருள் சூழ்ந்து காணப்படுவதால் இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே மின்விளக்குகளை முறையாக பராமரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.