ஸ்ரீமுஷ்ணம் அடுத்த கீழ்பாலையூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இரவு நேரத்தில் மின்விசிறியை இயக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டு வருவதால் பொதுமக்கள் நிம்மதியாக தூங்க முடியாமல் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க சீரான முறையில் மின் வினியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
