கச்சிராயப்பாளையம் அருகே ஏர்வாய்ப்பட்டினம், அசேபா நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். குறிப்பாக இரவு நேரங்களில் பொதுத்தேர்வுக்கு படிக்க முடியாமல் பள்ளி மாணவர்கள் பெரும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே மேற்கண்ட பகுதி மக்களுக்கு சீரான முறையில் மின் வினியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.