விபத்து அபாயம்

Update: 2025-03-09 16:04 GMT

நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட கீழவண்ணான்விளை கால்வாய் கரை தெருவில் சாலையோரம் ஒரு மின்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின்கம்பத்தில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிந்த நிலையில் காணப்படுகிறது. இதனால், மின்கம்பம் முறிந்து விழுந்து அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றி விட்டு புதிய மின்கம்பத்தை அமைக்க வேண்டும்.

-வீரசூரபெருமாள், கீழவண்ணான்விளை.

மேலும் செய்திகள்