பழைய ஆயக்குடி சட்டப்பாறை ரோட்டில் உள்ள மின்மாற்றியுடன் இணைக்கப்பட்டிருக்கும் மின்கம்பிகள் அந்த பகுதியில் உள்ள வயல்வெளியில் தாழ்வாக தொங்கியபடி இருக்கின்றன. இதனால் வயல்வெளிக்கு வேலைக்கு செல்பவர்கள் மீது அந்த மின்கம்பிகள் உரசி மின்விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே தாழ்வாக தொங்கும் மின்கம்பிகளை சீரமைக்க மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.