அத்தாணி அருகே சின்னத்தம்பிபாளையம் பஸ் நிறுத்தம் பகுதியில் மின் கம்பம் உள்ளது. ஆனால் இதிலுள்ள தெருவிளக்கின் வெளிச்சத்தை புளியமரத்தின் கிளைகள் மறைத்தபடி வளர்ந்துள்ளது. இதனால் இரவு நேரத்தில் அந்த பகுதி இருளாக காணப்படுகிறது. இதன் காரணமாக பஸ்சுக்காக காத்திருப்பவர்கள் குறிப்பாக பெண்கள் அச்சப்படுகின்றனர். எனவே மரத்தின் கிளையை வெட்டி அகற்ற அதிகாரிகள் முன்வர வேண்டும்.