எரியாத தெரு விளக்குகள்

Update: 2025-02-02 12:08 GMT

பெரம்பலூர் மாவட்டம், மாவிலிங்கை கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் நலனை கருத்தில் கொண்டு சாலை ஓரத்தில் தெருவிளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்த தெரு விளக்குகள் சரியாக எரியாமல் உள்ளதால் இரவு நேரத்தில் இப்பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் இரவு நேரத்தில் இந்த சாலை வழியாக செல்லும் பெண்கள் மற்றும் சிறுவர்- சிறுமிகள் பெரிதும் அச்சப்பட்டு வருகின்றனர். மேலும் இருளை பயன்படுத்தி இப்பகுதியில் சட்டவிரோத செயல்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்