அரியப்பம்பாளையம் ஜல்லியூர் அருகே கன்னிகாபுரம் செல்லும் தார்சாலையில் மின்கம்பிகள் தாழ்வாக செல்கின்றன. இதனால் அந்த வழியாக கனரக வாகனங்கள் மின்கம்பிகளை உரசியபடி செல்கின்றன. இதன் காரணமாக தீ விபத்து ஏற்பட்டு் உயிரிழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை உயர்த்தி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.