நாகர்கோவில் கோட்டார் பகுதியில் இருந்து பறக்கை செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் புத்தன்குடியிப்பு பகுதியில் 117, 118 எண் கொண்ட 2 மின்கம்பங்களில் மின்விளக்குகள் பழுதடைந்து எரியாமல் காணப்படுகிறது. இதனால் இரவு நேரம் அந்த வழியாக செல்லும் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பழுதடைந்த விளக்குகளை அகற்றி விட்டு புதிய மின்விளக்குகளை பொருத்திட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஷேக் அலி, வெள்ளாடிச்சிவிளை.