புகார் எதிரொலி

Update: 2024-12-22 11:22 GMT

சென்னை அரும்பாக்கம், எம்.எம்.டி.ஏ. முத்து மாரியம்மன் கோவில் பகுதியில் தரைவழி மின்சார கேபிள் சரியான முறையில் புதைக்கப்படாமல் சேதமடைந்திருந்தது. இதுகுறித்து 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியானதும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து மின்சார கேபிளை சீரமைத்தனர். உடனடியாக நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், துணை நின்ற ‘தினத்தந்தி‘-க்கும் அப்பகுதி பொதுமக்கள் பாராட்டை தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்