ஒளிராத மின்விளக்குகள்

Update: 2024-12-08 12:04 GMT

தஞ்சாவூரில் உள்ள பட்டுக்கோட்டை புறவழிச்சாலையில் மேம்பாலம் ஒன்று உள்ளது. இந்த மேம்பாலத்தில் வாகன ஓட்டிகளின் நலன்கருதி மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த சில நாட்களாக இந்த மின்விளக்குகள் சரிவர எரிவதில்லை. இதனால் மேம்பாலம் பகுதி இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதன்காரணமாக வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேம்பாலத்தில் உள்ள மின்விளக்குகள் மீண்டும் ஒளிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்