மின்சார வசதி இல்லாமல் இருளில் படிக்கும் மாணவர்கள்

Update: 2024-11-24 15:33 GMT
மின்சார வசதி இல்லாமல் இருளில் படிக்கும் மாணவர்கள்
  • whatsapp icon

தஞ்சை மாவட்டம் மதுக்கூர் ஒன்றியம் மண்ணாங்காடு கிராமத்தில் மூணுமாகொள்ளையில் 20-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதிக்கு முறையான மின்சார வசதி இல்லை. இதன்காரணமாக இரவு நேரங்களில் மாணவர்கள் இருளில் படிக்கும் அவல நிலை உள்ளது. ஒரு சில மாணவர்கள் மெழுகுவர்த்தி மற்றும் விளக்கு ஒளியில் படிக்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் ஆய்வு செய்து மின்சார வசதி செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்