மின்விளக்குகள் பொருத்த வேண்டும்

Update: 2024-09-01 17:44 GMT

கந்தம்பாளையம் அருகே உள்ள ராமதேவம் ஊராட்சிக்குட்பட்ட செட்டியாம்பாளையம் 4 ரோட்டில் அருகே கருப்பண்ண சாமி கோவில், அரசு உயர்நிலைப்பள்ளி, ராமதேவஊராட்சி மன்ற அலுவலகம், மகளிர் சுய உதவி குழு கட்டிடம் என அனைத்தும் பிரதான சாலையோரம் அமைந்துள்ளது. இந்த 4 பிரிவு சாலையில் ராமதேவம், கோலாரம், தொட்டியம் தோட்டம், கவுண்டிபாளையம் ஆகிய கிராமங்களுக்கு செல்லும் வழியில் அமைந்துள்ளதால் காலை முதல் இரவு வரை போக்குவரத்துக்கு இப்பகுதி மக்கள் பிரதான சாலையையே பயன்படுத்தி வருகின்றனர். இப்பகுதியில் பல ஆண்டுகளாக மின்விளக்குகள் பொருத்தாத காரணத்தால் இரவு நேரங்களில் கிராம மக்கள் சென்று வரவும் மிகவும் சிரமத்திற்குள்ளாகின்றனர். மேலும் அடிக்கடி விபத்துகள் நடந்த வண்ணமே உள்ளன. எனவே தொடர் விபத்துகள் ஏற்படுகின்றன காரணத்தால் உடனடியாக ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் அப்பகுதியில் மின்விளக்குகள் அமைத்து தர வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-அப்துல், கந்தம்பாளையம்.

மேலும் செய்திகள்