மின் விளக்குகளை சரி செய்யலாமே!

Update: 2024-08-18 17:46 GMT

ஓமலூர் தாலுகா கருப்பூர் பேரூராட்சிக்குட்பட்ட சமுத்திரம் ஏரியில் நடைபயிற்சி பாதை அமைக்கப்பட்டது. இந்த நடைபயிற்சி பாதையை சுமார் 200-க்கும் மேற்பட்டோர் பயன்படுத்தி வந்தனர். ஆனால் தற்போது நடைபாதையில் அமைக்கப்பட்டிருந்த மின்விளக்குகள் பல மாதங்களாக எரியவில்லை. இதனால் இரவு நேரங்களில் நடைபயிற்சிக்கு செல்வோர் மிகவும் சிரமம் அடைகின்றனர். மேலும் இரவு நேரங்களில் சிலர் மதுஅருத்தி விட்டு தகராறில் ஈடுபடுகின்றனர். எனவே சமூக விரோதிகளின் கூடாரமாக விளக்கும் நடைபாதையில் பழுதடைந்த மின் விளங்குகளை சரி செய்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கந்தசாமி, சேலம்.

மேலும் செய்திகள்