மின்விளக்குகள் அமைக்கலாமே!

Update: 2024-07-21 18:22 GMT

காடையாம்பட்டி தாலுகா காருவள்ளி ஊராட்சிக்குட்பட்ட பிரசித்தி பெற்ற சின்ன திருப்பதி கோவில் உள்ளது. இந்த கோவில் அருகில் காட்டுக்கொட்டாய் கிராமம் உள்ளது. இந்த கிராம சுற்றுப்புற பகுதியில் இரவு நேரங்களில் மின் விளக்குகள் இன்றி இருண்டு காணப்படுகிறது. இதனால் இரவில் பணி முடிந்து வரும்பெண்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் உள்ளது. மேலும் விஷ பூச்சிகள் மற்றும் பாம்புகள் நடமாட்டம் அதிகமாக உள்ளன. எனவே அதிகாரிகள் பழுதடைந்த மின் விளக்குகளை சரி செய்து தர வேண்டும்.

மேலும் செய்திகள்