இருளில் தவிக்கும் பொதுமக்கள்

Update: 2024-07-14 10:20 GMT

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் தாலுகா திருவிடைமருதூர் ஒன்றியத்தில் 70 கீரனூர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள தெருவிளக்குகள் கடந்த சில வாரங்களாக சரிவர எரிவதில்லை. இதனால் அந்த பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து கிடக்கிறது. இரவு நேரங்களில் பொதுமக்கள் சாலையில் அச்சத்துடன் நடந்து செல்கின்றனர். போதிய வெளிச்சம் இல்லாததால் வாகன ஓட்டிகளும் நிலை தடுமாறி கீழே விழுந்துவிடுகின்றனர். இரவு நேரம் முழுவதும் இந்த சாலையின் வழியாக செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் இருளில் சிக்கி தவிக்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள தெருவிளக்குகள் மீண்டும் ஒளிர நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்