சாய்ந்த நிலையில் மின்கம்பம்

Update: 2024-07-14 10:16 GMT

மயிலாடுதுறை பகுதி அருண்மொழித்தேவன் ஊராட்சி நீடூர் ஏனாதிமங்கலம் பாண்டூர் சாலையில் விவசாய நிலங்கள் உள்ளது. இந்த விவசாய நிலங்களின் ஓரத்தில் மின்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது முறையான பராமரிப்பின்றி மின்கம்பங்கள் சாய்ந்த நிலையில் நிற்கின்றன. பலத்த மழை பெய்தாலோ? காற்று வீசினாலோ? மின்கம்பங்கள் விளைநிலங்களுக்குள் விழுந்துவிடும் நிலையில் இருக்கின்றன. இதனால் விவசாய தொழிலாளர்கள் அச்சத்துடன் பணி செய்து வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சாய்ந்த நிலையில் உள்ள மின்கம்பங்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்