பகலிலும் ஒளிரும் மின்விளக்குகள்

Update: 2024-07-07 17:04 GMT

பகலிலும் ஒளிரும் மின்விளக்குகள்

பல்லடத்தில் பெரும்பாலான இடங்களில் பகல் நேரங்களில் தெருவிளக்குகள் வீணாக எரிந்து கொண்டே இருக்கிறது. பகல் நேரத்தில் தொடர்ந்து 3 மணி நேரத்திற்கு மேல் எரியும் இந்த தெருவிளக்குகளால், அரசின் நிதி தேவையில்லாமல் வீணடிக்கப்படுகிறது. மேலும் பகல் நேரத்தில் தொடர்ந்து தெரு விளக்குகள் எரிவதால், பல்புகள் அடிக்கடி பழுது ஏற்பட்டு, மீண்டும் இரவு நேரத்தில் எரிய வேண்டிய தெருவிளக்குகள் எரியாமல், இருள் சூழ்ந்த நிலை நீடிக்கிறது. எனவே பகல் நேரத்தில் தேவையில்லாமல் தெரு விளக்குகள் எரியாமல், உரிய நேரத்தில் விளக்குகளை அணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கந்தன்,பல்லடம்.

99876 38663

மேலும் செய்திகள்