மின்கம்பத்தில் செடி, கொடிகள்

Update: 2024-06-23 17:27 GMT

நாமக்கல் அடுத்த வள்ளிபுரத்தில் இருந்து பாலப்பட்டி செல்லும் சாலையில் எம்.ராசாம்பாளையம் மேடு உள்ளது. மேடு ஏறும் இடத்தில் சாலையில் மேற்கு பகுதியில் தார்சாலையையொட்டி ஒரு மின்கம்பம் உள்ளது. அந்த மின் கம்பத்தில் அருகில் உள்ள மரங்களில் இருந்து கொடிகள் படர்ந்து மின்கம்பமே தெரியாத அளவிற்கு ஆக்கிரமித்துள்ளன. கொடிகள் பின்னிப்பிணைந்து மின்கம்பம் மற்றும் மின் ஒயர்களில் படர்ந்து காட்சியளிக்கிறது. எனவே மின்வாரிய பணியாளர்கள் இந்த மின் கம்பத்தில் உள்ள செடி, கொடிகளை அப்புறப்படுத்த வேண்டும்.

-ராமசாமி, நாமக்கல்.

மேலும் செய்திகள்