ஒளிராத தெருவிளக்குகள்

Update: 2024-06-23 12:29 GMT

கோவை கணபதி மணியகாரன்பாளையத்ைத அடுத்த உடையாம்பாளையத்தில் கந்தசாமி நகர் உள்ளது. இங்கு மாநகராட்சி சார்பில் தெருவிளக்குகள் பொருத்தப்பட்டு உள்ளன. அதில் பல தெருவிளக்குகள் பழுதடைந்து ஒளிராமல் கிடக்கின்றன. இதனால் இரவில் அந்த பகுதியே இருள் சூழ்ந்து காணப்படுகிறது. மேலும் திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் நடைபெற வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக அப்பகுதி பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவே அச்சப்படுகிறார்கள். எனவே அங்கு தெருவிளக்குகளை பழுது நீக்க அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்