இருளில் மூழ்கிய நல்வாழ்வு மையம்

Update: 2024-06-23 11:36 GMT

திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் ஒன்றியம், பாலகிருஷ்ணம்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதி மக்களின் நலன் கருதி இப்பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நல்வாழ்வு மையம் அமைக்கப்பட்டு உள்ளது. பி.மேட்டூர் விஸ்வம்பாள் சமுத்திரம் தெற்கு, வடக்கு முதலான கிராமங்களின் மருத்துவ சேவைக்காக அமைக்கப்பட்டுள்ள இந்த மையத்தில் தாய் சேய் நலம், கர்ப்பகால மருத்துவம், பிரசவம், மருத்துவ முதலுதவி ஆகியவற்றை செவ்வனே செய்து வரும் வேளையில் மருத்துவ வளாகம் சுற்றுப்புறம் இருளின் மூழ்கியுள்ளது. இதனால் இரவு நேரத்தில் இப்பகுதியில் விஷ ஜந்துக்களின் நடமாட்டத்திற்கு அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்