உயர்மின் கோபுர விளக்கை சரி செய்யலாமே!

Update: 2024-06-02 17:52 GMT

நாமக்கல் மாவட்டம் மோகனூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட எஸ்.வாழவந்தி பஸ் நிறுத்தத்தில் உயர்கோபுர மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த உயர் கோபுரத்தில் 6 மின்விளக்குகள் உள்ளன. கடந்த மூன்று மாதங்களாக 6 விளக்குகள் உள்ள நிலையில் 2 மின் விளக்குகள் மட்டும் எரிந்து கொண்டிருக்கிறது. இந்த மின் விளக்குகள் எரியும் பட்சத்தில் சந்தை வளாகம், பள்ளி வளாகம், பஸ் நிறுத்தம் உட்பட பல்வேறு பகுதிகள் வெளிச்சமாக பொதுமக்களுக்கு பாதுகாப்பாக இருக்கும். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து உயர்மின் கோபுர விளக்கை சரி செய்ய வேண்டும் என அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-செல்வகுமார், பாலப்பட்டி.

மேலும் செய்திகள்