சேதமடைந்த மின்கம்பம்

Update: 2024-06-02 14:09 GMT

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் பொன்மார் 3-வது வார்டில் மின்கம்பம் ஒன்று உள்ளது. ஆனால் அந்த மின்கம்பம் சேதமடைந்த நிலையில் இருக்கிறது. அதிலிருந்து சிமெண்ட் பூச்சி கீழே விழுந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகிறது. மேலும், எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழும் நிலையில் உள்ளது. இது பொதுமக்கள் அதிகம் நடமாடும் பகுதி என்பதால், அசம்பாதவிதம் ஏதும் நடைபெறுவதற்குள் மின்கம்பத்தை மாற்றி அமைக்க மின்வாரிய அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்