அபாய மின் ஒயர்கள்

Update: 2024-04-07 18:03 GMT

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை சோளக்காட்டில் வாரத்திற்கு 2 முறை சந்தை கூடுகிறது. இந்த சந்தைக்கு கொல்லிமலை முழுவதும் இருந்து மலைவாழ் விவசாயிகள், வியாபாரிகள், பொதுமக்கள் வந்து செல்கின்றன. இந்த நிலையில் அங்குள்ள ஒரு மின்சார இணைப்பில் உள்ள ஒயர்கள் பாதுகாப்பின்றி திறந்தவெளியில் அறுந்து கிடக்கின்றன. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, அங்கு யாரும் பாதிக்காத வகையில் அந்த மின்சார ஒயர்களை சரிப்படுத்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

-மோசஸ், சோளக்காடு.

மேலும் செய்திகள்