புகாருக்கு உடனடி தீர்வு

Update: 2024-02-18 10:26 GMT

நெல்லை மாவட்டம் திசையன்விளை- நவ்வலடி சாலையில் மணியன்குடி பஸ் நிறுத்தம் அருகில் உள்ள மின்கம்பம் சேதமடைந்த நிலையில் உள்ளதாக ரவிச்சந்திரன் என்பவர் அனுப்பிய பதிவு ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் வெளியானது. இதையடுத்து அங்கு புதிய மின்கம்பம் அமைக்கப்பட்டது. கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த ‘தினத்தந்தி’க்கும், நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்