எரியாத மின்விளக்கு

Update: 2024-01-21 16:59 GMT
பழனி ராமநாதன்நகரில், பைபாஸ் சாலை சந்திப்பு பகுதியில் உயர் கோபுர மின்விளக்கு உள்ளது. இந்நிலையில் கடந்த நில நாட்களாக இந்த மின்விளக்கு எரிவதில்லை. இதனால் அந்த பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. எனவே அங்கு போதிய வெளிச்சம் இன்றி சாலையை கடக்க மக்கள் தவிக்கின்றனர். அதேபோல் வாகன விபத்தும் தொடர்ந்து நடக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உயர்கோபுர மின்விளக்கை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்