செங்கல்பட்டு மாவட்டம், மறைமலை நகர், பெரமனூர் ரெயில்வே குறுக்கு தெருவில் உள்ள மின்கம்பம் மிகவும் சேதமடைந்து உள்ளது. இதனால் எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் நிலை உள்ளது. அந்த பகுதியில் அதிகமான குழந்தைகள் விளையாடுவதால், விபரீதம் ஏதும் ஏற்படுவதற்கு முன்பு மின்வாரிய துறை அதிகாரிகள் மின்கம்பத்தை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.