சிதிலமடைந்த மின்கம்பம்

Update: 2023-12-31 13:42 GMT

திருச்சி மாவட்டம், மருங்காபுரி தாலுகா ,செவல்பட்டி பஞ்சாயத்து, லிங்கம்பட்டி கிராமத்தில் உள்ள மின்கம்பம் ஒன்று சேதம் அடைந்து ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். மேலும் பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மின்கம்பம் முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்