சிதிலமடைந்த மின்கம்பம்

Update: 2023-12-17 10:51 GMT

கரூர் மாவட்டம், உப்பிடமங்கலம் பேரூராட்சி, குமரக்கவுண்டனூர் புது தெருவில் சாலையோரம் ஒரு மின்கம்பம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த மின்கம்பம் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது விரிசல் ஏற்பட்டு ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. எனவே இந்த மின்கம்பம் பொதுமக்கள் நடமாட்டத்தின்போது முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்