தெருவிளக்குகள் ஒளிருமா?

Update: 2023-12-10 13:47 GMT

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி மதினாநகரில் தெருவிளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இவை கடந்த சில நாட்களாக சரிவர எரிவதில்லை. இதன்காரணமாக இரவு நேரங்களில் அந்த பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். குறிப்பாக வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர்.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள தெருவிளக்குகள் மீண்டும் ஒளிர நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்