உயர் கோபுர மின்விளக்கு அமைக்க வேண்டும்

Update: 2023-10-29 16:47 GMT
உளுந்தூர்பேட்டை கார்நேசன் தெருவில் 100-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு மின்விளக்கு வசதி இல்லாததால் இரவு நேரத்தில் பலர் தெருவில் அமர்ந்து மதுகுடித்துவிட்டு பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் இரவு நேரங்களில் பெண்கள் வெளியே வர அச்சப்படுகின்றனர். எனவே கார்நேசன் தெருவில் உயர்மின்கோபுர விளக்கு அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்