பழுதடைந்த மின்மாற்றியால் விவசாய பணிகள் பாதிப்பு

Update: 2023-10-29 11:47 GMT

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் தாலுகா விளல்கோட்டகம் கிராமத்தின் மின்மாற்றி பராமரிப்பின்றி உள்ளது. இதனால் அந்த மின்மாற்றி மூலம் மின்சாரம் பெறும் வீடுகள் மற்றும் விளைநிலத்தில் உள்ள பம்பு செட்டுகளில் அடிக்கடி மின்தடை பிரச்சினை ஏற்படுகிறது. இதன்காரணமாக விளைநிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தண்ணீர் இன்றி பயிர்கள் கருகி வயல்களில் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள மின்மாற்றியை முறையாக பராமரிக்கவும் மின்தடை ஏற்படாமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைவிடுத்துள்ளனர்.



மேலும் செய்திகள்