மின்வாரியம் கவனிக்குமா?

Update: 2023-09-27 14:37 GMT

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சாலையோரங்களில் அதிக அளவில் மரங்கள் வளர்ந்து காணப்படுகிறது. இந்தநிலையில் அந்த மரங்களில் இருந்து மரக்கிளைகள் அந்த வழியாக செல்லும் மின் ஒயர்களில் உரசியபடி செல்கின்றன. தற்போது மழைக்காலம் தொடங்கி உள்ளதால் அசம்பாவிதங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட மின்வாரிய அலுவலர்கள் அந்தந்த பகுதிகளில் சாலையோரம் உள்ள மரக்கிளைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-காந்திமதி, கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்