மின்விளக்குகள் அமைக்கப்படுமா?

Update: 2023-09-24 16:20 GMT

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே அகரத்தில் இருந்து மாரண்டஅள்ளி செல்லும் சாலையோரம் சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவிற்கு மின்விளக்குகள் இல்லை. இதனால் இரவு நேரங்களில் இந்த பகுதியை கடந்து செல்ல அந்த பகுதியில் வசிக்கும் கிராம மக்கள் அச்சப்படுகின்றனர். மேலும் திருட்டு சம்பவங்கள் நடக்கும் அபாயமும் உள்ளது. எனவே இந்த சாலையில் மின்விளக்குகள் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-கதிர்வேல், மாரண்டஅள்ளி.

மேலும் செய்திகள்