சுவிட்ச் பெட்டி அமைக்கப்பட்டது

Update: 2023-09-24 08:11 GMT

கீழ்குளம் பேரூராட்சிக்கு உள்பட்ட இனயம் பழைய பள்ளித்தெரு பகுதியில் சாலையோரம் ஒரு மின் கம்பத்தின் அமைக்கப்பட்டுள்ள மின் மீட்டர் மற்றும் தெருவிளக்கு சுவிட்ச் போன்றவை திறந்த நிலையில் காணப்பட்டது. இதனால், மழையில் நனைந்து மின் விபத்து ஏற்படும் அபாயம் இருந்தது. இதுபற்றி ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அந்த மின்கம்பத்தில் புதிய சுவிட்ச் பெட்டியை பொருத்தினர். நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தியை வெளியிட்ட தினத்தந்திக்கும் அந்த பகுதி மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

செய்யது அலி, இனயம்.

மேலும் செய்திகள்